Followers

Search Here...

Thursday 21 December 2017

கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்து வணங்குகிறான்

ஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.
ஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா?

கோவில் தூண்களில் உள்ள அழகான சிவனின் சிலையை  "தெய்வம்" என்று வணங்குவதில்லை.
அதே கோவிலில் கர்பக்ரஹத்தில் உள்ளே இருக்கும் அழகு கூட இல்லாத, ரூபமில்லாத நிலையில் உள்ள சிவ லிங்கமாக இருக்கும் சிலையை, "தெய்வம்" என்கிறான். இதன் ரகசியம் என்ன?

ஹிந்துக்கள், எல்லா கல்லையும் தெய்வமாக வணங்கவில்லை என்று தெளிவாக இது புரிய வைக்கிறது. ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலை மட்டும் "தெய்வமாக" தெரிகிறது?
இதன் ரகசியம் என்ன?

விளக்கம்:
கீழ்நிலை மதங்களில் உள்ளவர்கள், ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று வழிபடுவதாக நினைக்கின்றனர்.

அவர்களுக்கும் ஒரு கல் சிலையோ, கல்லோ தேவைப்படுகிறது என்பதை மறந்து பேசுவது நகைப்புக்கு உரியது.

ஹிந்துக்கள் என்ற சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், மியூசியத்தில் இருக்கும் சிவன் சிலையையும், பெருமாள் சிலையையும் தெய்வமாக  கும்பிடுவதில்லை.
சிலையாக தான் பார்க்கின்றனர்.

சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை வேண்டுமானால் செய்கின்றனர். ஆனால் சிலையையே "தெய்வம்" என்று நினைப்பதில்லை.

சாஸ்திரத்தில் சொல்லாத எந்த தெய்வங்களும் மனிதன் செய்த கற்பனையே.
அவன் புத்தியை கொண்டு ஒருவரை தெய்வம் என்று கூறிக்கொள்கிறான்.
அதனாலேயே எதை எதையோ தெய்வம் என்றும், யார் யாரையோ தெய்வம் என்றும் சொல்லி மற்ற நாட்டில் இருந்து, இறக்குமதியான பொய் மதங்களை ஹிந்துக்கள் புறக்கணிக்கின்றனர்.

கோவிலுக்கு செல்லும் போது, மிக அழகான சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் காணலாம்.

அரசர்கள் கட்டிய இந்த சிலைகளில் சிவன், ப்ரம்மா, அக்னி, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்கள்,மிக அழகாக அப்படியே செதுக்கப்பட்டு இருக்கும்.

இந்த சிற்பங்களை பார்த்து, ஹிந்து வணங்குவதில்லை, பக்தி செய்வதும் இல்லை.
அழகாக சிற்பம் உள்ளது என்று மட்டும் தான் ரசிப்பான்.
சிலை தான் என்றும் சொல்லுவான்.

ஆனால், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டவுடன், அவனுக்கு அது தெய்வம் என்ற உணர்வை கொடுத்து விடுகிறது.

"தெய்வம்" என்ற உணர்வு வந்தவுடன், அதன் முன் பிரார்த்தனை செய்கிறான், பக்தி செய்கிறான். தன் குறைகளை, தன் கஷ்டங்களை கூட சொல்லி வேண்டுகிறான். அழுகிறான். பூஜிக்கிறான்.



தூணில் இருக்கும் தெய்வ சிலைகள், இந்த கர்பகிரஹத்தில் இருக்கும் சிலையை விட அழகானதாக கூட இருக்கும்.

அழகுக்காக தூணில் இருக்கும் சிலையை "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை ஹிந்து என்று நாம் கவனிக்க வேண்டும்.

அறிவு உள்ள மனிதன், தூணில் இருக்கும் அழகான தெய்வசிலையை, சிலை என்று தான் உணர்கிறான். சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அந்த சிலையையே "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை.

அதே சமயம், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டதும், சிலை என்ற நினைவையும் மீறி, இறைவன் என்று உணர்கிறான்.

இதில் என்ன ரகசியம் உள்ளது?
இதை கவனிக்கும் போது தான், ஏன் திருப்பதி, ஸ்ரீ ரங்கம், காசி போன்ற க்ஷேத்ரங்களில் மக்கள் அலை அலையாக வருகின்றனர் என்பது புரியும்.

தெய்வ அணுகிரஹம் அடைந்த ஒரு ஞானியால், ரிஷியால், பக்தனால் ஆராதித்து வணங்கப்பட்ட சிலையில், தெய்வங்கள் தன் சாநித்யத்தை ப்ரகாசப்படுத்துகின்றன.

சில ஞானிகள், ரிஷிகள், மகாத்மாக்கள் தாங்களே  பிரதிஷ்டை செய்த தெய்வங்களிடம், சில காலமோ, நிரந்தரமாகவோ சாநித்யத்தோடு அந்த இடத்திலோ, ஒரு சிலையிலோ இருக்குமாறு பிரார்த்தனை செய்து பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

அவர்கள் காலத்துக்கு பின்னும், தெய்வங்கள் அந்த மகானின் அன்புக்காக, முழு சாநித்யத்தோடு அந்த சிலையில் இருந்து, வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருகின்றனர்.

திருப்பதி போன்ற க்ஷேத்திரங்களில் வெங்கடேச பெருமாள், தானே தோன்றியவர். எந்த ரிஷியும் வேண்டி வந்தவர் இல்லை. தானே சங்கல்பித்து அர்ச்ச அவதாரமாக வந்தவர்.

ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தோன்றிய பெருமாள், ப்ரம்ம தேவனுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள், தீபப்ரகாச பெருமாள், சரஸ்வதி தேவிக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

காஞ்சியில் உள்ள நிலாத்திங்கள் பெருமாள், சிவபெருமானுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

108 திவ்ய க்ஷேத்ரங்களும் ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலங்கள்.

சில கோவில்களில், ஒரு விளக்கு ஏற்றுவார் இல்லாமல் இருக்கும் நிலையிலும், அங்கு இருக்கும் பெருமாளை, இன்று சென்று பார்த்தால் கூட சாநித்யம் இருப்பதை, நிம்மதியை, அமைதியை உணரலாம்.

ஏதோ ஒரு பக்தனின் பிரார்த்தனைக்காக, தெய்வங்கள் சிலைகளில் சாநித்யத்துடன் இன்றும் இருக்கின்றனர்.

இதன் காரணத்தினால் தான், நாம் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டால், நம் ஆத்மா இதை "தெய்வம்" என்று பார் என்று தோன்ற செய்கிறது.

அதே போன்ற சிலை, ஒரு தூணில் இருந்தால், அதை ஒரு கல் சிலையாக பார்க்க செய்கிறது.

கோவில்களில் கர்பக்ரஹத்தில் உள்ள தெய்வங்கள் பெரும்பாலும் ரிஷிகள், யோகிகள், பக்தர்கள், மகான்கள் வழிபட்ட தெய்வ விக்ரஹங்கள் என்பதை நாம்  மறக்க கூடாது.

நம்மை போன்ற அஞானிகளும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், இவர்கள் நமக்காக பெருமாளிடமோ, சிவனிடமோ பேசி, எப்பொழுதும் அந்த சிலையில் வாசம் செய்யுமாறு கேட்டு, வரமாக வாங்கி விட்டார்கள், நம் மீது உள்ள கருணையின் காரணமாக.

ஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.

தெய்வங்கள் நம் அபச்சாரங்களை பொறுத்து கொண்டு, அந்த பக்தனின் பிரார்த்தனைக்காக சாந்நித்யம் குறையாமல் இருந்து, வரும் பக்தனுக்கு அருள் செய்கின்றனர்.

ஞானியும், ரிஷியும் கூட பிரதிஷ்டை செய்யாத பெருமாள் வெங்கடேச பெருமாள்.
பரவாசுதேவன், தானே விருப்பத்துடன் வந்த அர்ச்ச அவதாரம்.
இதன் காரணத்தாலேயே, மலை உச்சியில் இருந்தாலும், மக்களால் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

ஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா?
ப்ரகலாதனே இதற்கு பிரமாணம்.

ஹிரண்யகசிபு தன் மாளிகையில், தான் கட்டிய தூணை பார்த்து, "இதில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று தன் மகன் பிரகலாதனை பார்த்து கோபத்துடன் கேட்கிறான்.

எங்கும் இருக்கும் நாராயணன், இதிலும் உள்ளார் என்று பிரகலாதன் சொல்லி, "அப்பா, இந்த தூணில் இருக்கிறார்" என்றான்.

கல்லும், மண்ணும் கொண்டு தானே கட்டிய தூணில் நாராயணன் இருக்கிறானா, என்று படு பயங்கர கோபத்தில் அந்த தூணை ஒரு குத்து விட, அதிலிருந்து நாராயணன் நரசிம்மமாக ஆவிர்பவித்து வெளி வந்து அவனை கிழித்து எறிந்து விட்டார்.

தூணில் எப்படி பகவான் சாந்நித்யம் ஏற்படும்? அது கல் தானே? பிரகலாதன் என்ற பக்தன் கேட்டான் என்பதற்காக, கல் தூணில் இருந்து வெளி வந்தார் பகவான்.

இதன் காரணமாகவே கீதையில், "அஹம் பக்த பரா தீநஹ:" என்று சொல்கிறார். என் பக்தனுக்காக எதையும் செய்வேன் என்கிறார்.

உண்மையான ஒரு பக்தன், ஒரு கல்லில் பகவானை பிரதிஷ்டை செய்தாலும், அவனுக்காக பகவான் வந்து விடுகிறார்.

பார்க்கும் சிலைகள் எல்லாம் தெய்வமாக தெரியாது.
பொருட்காட்சியில் உள்ள சிலைகள், சிலைகளே.

ஆனால் கோவிலில் உள்ள சிலைகள் பேசும் தெய்வங்கள். பக்தி உள்ளவனுக்கு அவன் கேட்பதை கொடுக்கிறது இந்த தெய்வங்கள்.

ஹிந்துவாய் பிறந்தது நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.
மதம் மாறி, பொய் மாதங்களில் சேர்ந்து கெட்டு போன்றவர்களும், தான் பாட்டனார்கள் இந்துக்களே என்ற பெருமை கொண்டு, பொய் தெய்வங்களை விட்டு, பரவாசுதேவனை வணங்கி அருள் பெற வேண்டும். 

No comments:

Post a Comment